மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் - அதிர்ச்சி சம்பவம் - Video

பெண் அணிந்த ஆடையில் அரபு எழுத்து அச்சிடப்பட்டதால், அவரை தாக்க முயற்சித்த கும்பலால் பரபரப்பு நிலவியது.

பாகிஸ்தான், லாகூர் நகரை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் சேர்ந்து உணவகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தார், அதில் 'ஹல்வா' (அழகு அல்லது இனிப்பு என பொருள்) எனும் அரபு மொழியில் ஆடை முழுவதும் அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பெண்ணின் உடையில் குர்ஆனில் உள்ள வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக உணவகத்தில் இருந்தவர்கள் தவறாக எண்ணி மதத்தை அவமதிப்பதாக கூறி விமர்சித்துள்ளனர்.

இதைகுறித்து, அருகில் உள்ளவர்களுக்கும் தெரியவந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுக்கூடி அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால் அப்பெண் மிகுந்த அதிர்ச்சியும், பயமுமடைந்தார்.

 இந்நிலையில், அந்த பெண் இஸ்லாமிய மதத்தையும், புத்தகத்தையும் அப்பெண் அவமதித்துவிட்டதாக குறிப்பிட்டு அவருக்கு மரண தண்டனை வழங்க கோரி அந்த கும்பல் கோஷம் எழுப்பியது.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனே போலீசார் அங்கு விரைந்தனர்.மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணை அங்கிருந்து மீட்டனர்.

இதையடுத்து அந்த பெண், குர்ஆன் வசனம் இடம்பெற்ற ஆடையை தான் அணியவில்லை எனவும், ஆனாலும் நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் இதுபோன்று இனி நடக்காது என தெரிவித்துள்ளார்.

அங்கு இஸ்லாமிய மதக்கடவுள், புத்தகம் குறித்து அவதூறாக பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.