சுயதொழில் செய்பவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

இதன்படி 12 இலட்சம் பேர் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.