விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி! பழ. நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார் : முத்தரசன்


விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஆதாரம் இல்லாமல் நெருமாறன் சொல்ல மாட்டார்

பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது  எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி என அவர் சுட்டிக்காட்டினார்.