ஹரீனை உடனடியாக தூக்கிலிடுங்கள் : பொங்கியெழுந்த எம்.பி.க்கள்.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்ததன் மூலம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தேசத்துரோக குற்றத்தை இழைத்துள்ளார். அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என பிவித்துரு ஹெல உறும தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர்,

இது, அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் படி எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுவதாகும

இதன்படி அமைச்சர் ஹரீன் அமைச்சர் பதவியை வகிக்க தகுதியற்றவர். மறுபுறம், நமது நாட்டை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகச் செயலாகும்.

தேசத்துரோகம் என்பது ஒரு அரசனுக்கு துரோகம் செய்வதல்ல. நமது தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகத்திற்கான தண்டனை மரணம்.

எளிமையாகச் சொல்வதானால், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தைச் செய்துள்ளார்  என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேநேரம் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்தக் கூற்று மட்டுமல்ல,'எங்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அனைத்தையும் இந்தியாவுக்குக் கொடுப்போம்' என்றும் வெட்கப்பட்டு வேடிக்கையான புன்னகையுடன் கூறினார்.

எட்கா ஒப்பந்தம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளது. எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்தியர்கள் இலங்கையின் சேவைப் பொருளாதாரம், தொழில் சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இன்றி நுழைய முடியும். அப்படி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்த நாட்டை இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக மாற்றலாம்.

மேலும், நமது விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின்சார சபை மற்றும் பிற பொருளாதார மையங்கள் எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், இந்தியாவுடன் எரிசக்தி ஒருங்கிணைப்புக்கு சாலை அமைக்கப்படுகிறது.  என அவர் தெரிவித்தார்.

இதேநேரம் ஹரின் பெர்ணன்டோவின் கருத்து, பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

 இந்த நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மேலும், இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கருத்தை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.