கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிடியெடுப்பு :வைரலாகும் காணொளி

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ரி 20 போட்டியொன்றில் எதிரணி வீரர் அடித்த பந்தை லாவகமாக பிடித்த வீரர்களின் காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ளூர் ரி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணியின் தொடக்க வீரரான வில் யங் அடித்த பந்தை எவருமே நம்பமுடியாத வகையில் பிடித்த வெலிங்டன் வீரர்கள் டிராய் ஜோன்சன் மற்றும் நிக் கெல்லி இருவரும் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

வில் யங் அடித்த பந்து உயரத்தில் பறந்தது.ஆனால் அதனை துரத்திச் சென்ற டிராய் ஜோன்ஸன் பவுண்டரி லைனுக்கு அருகில் சென்று லாவகமாக கையில் எடுத்தார்.

ஆனால் சென்ற வேகத்தில் நேராக பவுண்டரி லைன் தாண்டி விழச்சென்ற அவர், அந்த தருணத்திலும் நிதானித்து மற்றொரு களத்தடுப்பாளரான கெல்லியின் கைகளில் பந்தை தூக்கியெறிந்தார். அதை லாவகமாக பிடித்த கெல்லி, வில் யங்கின் விக்கெட்டை பறித்தார்.