தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.