கடன் திட்டத்தில் இருந்து விலக அரசாங்கம் தயாராக இல்லை: இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தின் கட்டமைப்பில் இருந்து விலக அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அரச வருமானம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை எனவும் பல காரணிகள் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இரண்டு வார கால மீளாய்வில் அரச வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.