அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கோவிட்!

கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும் குறித்த வங்கியின் தகவல் துறையின் கூடுதல் பொது மேலாளர் அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனைகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தங்கள் வேலையைத் தொடருமாறும் அறிவுறுத்தினார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகளில் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனை செய்தனர் என்றும் இது தொடர்பாக MOH மற்றும் PHI அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.