மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் - ரணில் விக்ரமசிங்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (29) பிற்பகல் அதிபர் கண்டி மல்வத்து அஸ்கிரிய பெரியவர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இக்கட்டான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாரிய பங்களிப்பை ஆற்றிவரும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஆதரவு இருக்க வேண்டும் என அஸ்கிரி தரப்பு அனுநாயக்க ஆனமடுவே தம்மாதஸ்ஸி தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.