நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!


மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
 
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய நாணயமாற்று நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.