எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ள கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய கோரி அவருக்கு எதிராக ஜூலை 9ம் திகதி நாட்டில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார். மேலும் அவர் தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.