அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட பின்னர், ஞானா அக்காவுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.

இதனால் ஞானா அக்கா சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.

இருப்பினும் தற்போது மீண்டும் சோதிடம் மற்றும் சாந்தி கர்மம் ஆகியவற்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சில அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், தமது எதிர்கால இலக்குகளை அடைவதற்காக ஞானா அக்காவைக் கொண்டு யாகமொன்றை மேற்கொள்ள கடந்த ஒரு மாத காலமாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.