வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து அவர் தெரிவிக்கையில்..

“ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் எமக்கு வழங்கப்படவுள்ளன.

இதுவும் முன்னர் போன்றே, வங்கி அமைப்பு ஊடாக சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு தனி இலக்கத்துடனான வட்டி வீதத்தில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக இன்னும் சில மாதங்கள் செல்லும்.

மேலும் கடன் உத்தரவாத நிறுவனத்தினையும் (credit guarantee institution) ஆரம்பித்து முன்னெடுத்து செல்ல உள்ளோம்.

இதன் முழுமையான நோக்கம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலனுக்காகும்..” எனத் தெரிவித்தார்.