புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத் திணைக்களம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போதுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப் பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேநேரம் பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
அதேநேரம் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதலும், அதில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின் போது அதனை தம்வசம் வைத்திருப்பதும் கட்டாயமானதாகும் என அவர் சுட்டுக்காட்டியுள்ளார்