க்ளென் மெக்ஸ்வெல் எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் தன்னை பெங்களூரு (RCB) அணிக்குள் சேர்க்க வேண்டாம் என அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு20 கிரிக்கெட் தொடருக்கு முன் தன்னை உடல் மற்றும் உள ரீதியாக தயார்படுத்திக்கொள்ளவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைச்ஸ் (SRH) அணிக்கெதிராக நேற்று நடைப்பெற்ற போட்டியில் க்ளென் மெக்ஸ்வெல் அணியில் இடம்பெறவில்லை.

இந்த வருட ஐபிஎல் தொடரில் மெக்ஸ்வெல் தான் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் 32 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார்.

மெக்ஸ்வெல்லின் இந்த மோசமான துடுப்பாட்டம், துடுப்பாட்டத்தை மட்டுமே நம்பியுள்ள பெங்களூரு அணியை வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையிலேயே, இந்த வருடம் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் முடிவை மெக்ஸ்வெல் எடுத்துள்ளார்.