முல்லைத்தீவு பகுதியில் இளம் யுவதி திடீர் மாயம்


முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 வயதுடைய சிவகரன் ஜெயலக்சனா என்ற குறித்த யுவதி கடந்த 27.07.2022 முதல் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையில், அவர் கடைசியாக சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார். 

யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி இலக்கம் - 076 0777615 மற்றும் 074 0961230