பேரணியின் இறுதி நிகழ்வுக்கு கெடுபிடி..! தடையை தகர்த்து உள்நுழைந்த இளைஞர்கள் - பரபரப்பாகும் மட்டு - வெவர் மைதானம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் மட்டக்களப்பு - வெவர் மைதானத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வெவர் மைதானத்திற்குள் பேரணி உள்நுழையாத வகையில் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் பாதுகாப்பு தடையை தகர்த்து உள்நுழைந்த இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இறுதிப்பரகடனத்திற்கான ஏற்பாடுகளை மைதானத்திற்குள் செய்துவருகின்றனர்.

பேரணியில் செல்வோரும், ஏற்பாட்டுக்குழுவும் எவ்வாறான தடை வந்தாலும் அதனை உடைத்துக்கொண்டு வெவர் மைதானத்திற்குள் உள்நுழைந்து இறுதி நிகழ்வை மேற்கொள்வோம் என உறுதி பூண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.