க.பொ.த. உயர்தரப் பரீட்சை திகதி வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ம் திகதி 2943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய 340508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.இதேவேளை க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 5ம் திகதி வரை 2438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.279141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66101 தனியார் பரீட்சார்த்திகளும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.