நாளை ஆரம்பமாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.இம்முறை 2437 பரீட்சை மையங்களில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன் 345242 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சையில் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அவர்களில் 279141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சை எழுதவுள்ளனர்.