உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்! பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

2023 இற்கான உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது இம் முறை புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, பழைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் சில வலைத்தளங்கள் பழைய அட்டவணையைக் காட்டக்கூடும்.

பரீட்சாத்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிச்சீட்டிலேயே காட்டியுள்ளோம். அதனால் வேறு எந்த தகவலுக்கும் செல்லத் தேவையில்லை.

அனுமதிச்சீட்டில் உள்ள அட்டவணையின் படியே பரீட்சைகள் இடம்பெற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.