அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனுமதிப்பத்திரம் இன்றி அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகளை தொடர்பாக நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.அனுமதிக்கு முன் அந்த நேரத்தில் கோரிக்கையின் முக்கியத்துவத்தை நிதி அமைச்சகம் பரிசீலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.