கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம்!

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் வியாழக்கிழமை எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் இன்று காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் குறித்து அடுப்பு வெடித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த வெடிப்பு சம்பவத்தில் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.