ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் விநாயகர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்

அத்துடன் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றும் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

 1000க்கும் மேற்பட்ட பெருந்திரளான மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.