இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி குறித்த பங்குகளை சந்தைக்கு விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், LP எரிவாயு ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.