கணேமுல்ல சஞ்சீவை கொலை : 15000000 ரூபா வாங்கியுள்ள சந்தேக நபர் : கொலைக்கு முன்னர் ஒத்திகையும் பார்த்துள்ளதாக தகவல்



 

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றினு வைத்து, பிரபல பதாளகுழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும தகல்கள் வெளியாகியுள்ளன.

திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
இந்தநிலையில் அவரை 72 மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரப்படவுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
 
இதேவேளை, புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று மாலை கைதான குறித்த சந்தேகநபர் பல பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.
 
குறித்த சந்தேகநபர் பெண்ணொருவருடன் இணைந்து இந்த குற்றத்தைப் புரிந்துள்ளதுடன் பல அடையாள அட்டைகளும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
 
அத்துடன் சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டை ஒன்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
இந்த சந்தேகநபர் முதலில் தம்மை மொஹமட் அஸ்லம் ஷெரீப்டீன் என்ற பெயரில் அடையாளப்படுத்தியதுடன், பின்னர், சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனஆராச்சி என்ற பெயரிலும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். எனவே முஸ்லிம் தானா அல்லது வேறு இனத்தை சேர்ந்தவரா என்பது தொடர்பில் அடையாளம் காண விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
அத்துடன், அவரிடம் காணப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையில் கொடிகாரகே கசுன் பிரபாத் நிசங்க என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும் குறித்த சந்தேக நபர் இராணுவ லெப்டினாகவும் கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெற்றதாகவும் இலங்கை இராணுவ கரப்பந்தாட்ட அணியிலும் அவர் அங்கம் வகித்;திருந்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 1991 ஆம் ஆண்டில் பிறந்த இவர் போதைக்கு அடிமையானவர் என்பதாலேயே இராணுவ சேவையிலிருந்து விலகியுள்ளார்.
இந்தநிலையில், மேலதிக விசாரணைகளுக்கமைய, அவரது உண்மையான அடையாளம், அவரின் முந்தைய குற்றங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்லக்கூடும் என்பதால் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
 இதேநேரம் கட்டுநாயக்க அதிகவே வீதியில் குறிப்பிட்ட அளவை மீறி வேகமாக பயணித்த வாகனங்களை பறிசோதித்த நிலையிலேயே சந்தேக நபர் பயணித்த நபரின் வாகனம் பொலிஸாரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகலுக்கமைய, புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் புத்தளம் ஊடாக மன்னார் சென்று , இந்தியா ஊடாக டுபாய் அல்லது ஜப்பான் செல்வதுதான் இவரின் திட்டமாக இருந்துள்ளதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணத்துக்காக அல்லாமல் நண்பர்களின் நட்புக்காக இதுவரை 5 பேருக்கும் மேற்பட்டோரை கொலை செய்திருந்கும் இவர், இந்த கொலை சம்பவத்துக்காக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவை வாங்கிகொண்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சட்டத்தரணி போலவே ஆடையுடுத்தி இதற்கு முன்னர் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து சென்று ஒத்திகையும் பார்த்துள்ளார்.
அவருக்கு துப்பாக்கியை புத்தகத்தில் மறைத்து கொண்டுவந்த நீர்கொழும்பு போதைப்பொருள் வியாபாரி செவ்வந்தியும் ஒத்திகைகளை செய்துபார்த்துள்ளார்.

சட்டத்தரணிகள் பாவிக்கும் அடையாள அட்டை தயாரித்து, சட்டப்புத்தகத்தை வெட்டி அதனுள் துப்பாக்கியை வைக்கும்வரை அனைத்து நுட்ப வேலைகளையும் சந்தேக நபரான செவ்வந்தியே முன்னெடுத்துள்ளதாக அறிய வருகின்றது.  

அதேநேரம், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட குறித்த சந்தேகநபர், அண்மையில் கல்கிஸ்ஸை – வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
ஜப்பானில் இருக்கும் கெசெல்பத்தர பத்மே, ராகமவில் இருக்கும் பட்டுவத்த சாமர, கம்பஹா ஒஸ்மன் ஆகிய மூவரும் இணைந்து இந்த கொலை சம்பவத்தை சினிமா பாணியில் முன்னெடுத்துள்ளனர்.
 
இதேவேளை, நேற்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துக்காகத் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.
 
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே நேற்றைய தினம் நீதிமன்றுக்குத் துப்பாக்கியைக் கொண்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
 
குறித்த பெண்ணும் சட்டத்தரணி போன்று வேடமணிந்து சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவவின் சடலத்தை அடையாளம் காண உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.