சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுகாதார ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.