மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை


இந்த மாதத்தில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மாதத்தில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.பொதுமக்கள் வரிசையில் நிற்கும் போது அதிகாரிகள் தரகுகட்டணம் மற்றும் இலஞ்சம் கொடுத்து விலையை உயர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.

மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே செயற்பாட்டில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்குள் அது அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.