கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் சென்று இது தொடர்பான விடயங்களைப் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு http://www.slbfe.lk சென்று புள்ளி அமைப்பு பரீட்சை -2024 (உற்பத்தி, மீன்பிடி, கட்டுமானம், கப்பல் கட்டுதல், சேவை 1 மற்றும் சேவை 2) என்ற பிரிவில் பதிவு செய்யலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த பரீட்சைக்கு 18 முதல் 39 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.