கொரோனா தொற்றால் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் காலமானார்!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அதுல கஹந்தலியனகே கொரோனாவால் காலமானார்.ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று (சனிக்கிழமை) இரவு காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தமது 74வது வயதில் காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் கொரோனா தடுப்புச் சட்டத்திற்கு அமைய நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.