இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தலே வேண்டும்-ஐக்கிய தேசியக் கட்சி!

ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி, மாகாண சபை அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் என கூறினாலும் இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தலே வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.