இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவர் கைது!

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரையே பொலிஸார் வேலணை வெண்புரிநகர் பகுதியில் இவ்வாறு கைது செய்துள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.