சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட் வைத்திருந்த ஐவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 5 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு – மாளிகாவத்தை, ஹலவத்தை மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சுங்க அதிகாரிகளினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.