சிலாபத்தில் பெய்த மீன் மழை

சிலாபம் பம்பல பிரதேசத்தில் வானில் இருந்து மீன் விழுந்த சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று மாலை மழையுடன் வானில் இருந்து இந்த மீன்கள் விழுந்துள்ளது.

பம்பல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அருகிலேயே அதிகளவிலான மீன்கள் விழுந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மீன் மழை போன்று பொழிந்ததாகவும் மீன்களுக்கு மேலதிகமாக ஆமைகளும், நன்டுகளும் விழுந்ததாகவும் அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த மீன்களை மக்கள் மீட்டுள்ளனர்.

அதனை பாடசாலை மாணவர்கள் பலர் வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படகின்றது.