பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தவர்கள் மீது துப்பாக்கிசூடு : இருவர் பலி


மொரகஹஹேன - மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
 
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்ந சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.