மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த தந்தை - இருவரும் சடலமாக மீட்பு

அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று  மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.