பிரபல தமிழ் வர்த்தகர் மர்ம மரணம் - மாமியாரிடம் நீண்டநேரம் விசாரணை


ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரது மனைவியின் தாயாரிடம் (27) நீண்ட நேரம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மேலும், தினேஷ் ஷாப்டரின் மனைவியிடமும் நான்காவது முறையாக நேற்று விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியின் தாயாருக்கு தினேஷ் ஷாப்டர் அனுப்பியதாகக் கூறப்படும் தொலைபேசிச் செய்தி மற்றும் அவருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலும் பல விஷயங்கள் குறித்து அவரிடம் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினேஷ் ஷாப்டரின் மர்மக் கொலை தொடர்பாக வெளிவந்துள்ள உண்மைகளை வரிசைப்படுத்தவும், இருவருக்கும் ஏதேனும் தகராறுகள் மற்றும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறியவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தினேஷ் ஷாப்டரின் மனைவி தனி ஷமினிடம் மீண்டும் நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல சம்பவங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.