இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்ளுக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் எதிர்வரும் 25ம்  திகதி வரை விளக்கமறியல்!கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய நிலையில்  மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும்  கடந்த சனிக்கிழமை கடற்படையினர் கைப்பேற்றியிருந்தனர்.குறித்த 12 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்த நிலையில் குறித்த 12 பேரையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்தியபோதே இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.குறித்த மீனவர்கள் 12 பேரும் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.