பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பிரத்யேக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.“ஹோப் கேட்வே” என்று பெயரிடப்பட்ட இந்த விசேட நுழைவாயில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளால் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.