வீரகேசரி, தினக்குரல் மற்றும் யாழ். ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச்சங்க பிரதான மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு ஒன்றியத்தின் தலைவர் எஸ். ஸ்ரீகஜன் தலைமை தாங்கினார்.
தமிழ், சிங்கள பத்திரிகைகளின் சிரேஸ்ட ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையைச் சேர்ந்த பலரும் இங்கு உரையாற்றினர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புக்களுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருநு்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வட பிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.