நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள முறைமை கோளாறுகள் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதிலுள்ள சிரமங்கள் காரணமாக இந்த மின் தடை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.களனிதிஸ்ஸ அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக நேற்றிரவு பல பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இதேவேளை மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தது.டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய இரண்டாவது தடவையாக மூடப்பட்ட போதும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.எவ்வாறாயினும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதத்தை பெறுவதில் டொலர் நெருக்கடி காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாகவே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.