வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு!

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாளை (சனிக்கிழமை) P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணிநேர மின்வெட்டும், மாலை 4.30 தொடக்கம் 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.இதேவேளை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணிமுதல் 4.30 மணிவரையான காலப்பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.