அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! வெளியாகியது விசேட சுற்றறிக்கை

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்றை சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வா இந்த வெளியி்ட்டுள்ளார்.

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக மாறியுள்ளதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் அவசர தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட கிளையின் ஊடாக நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுடன் விடுமுறையை எடுக்க முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03) முதல் 3 நாள் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.