அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு: நாடாளுமன்றில் ரணில் பகிரங்கம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றமத்தில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றிருந்த நிலையிலேயே, அவர் இந்த உரையை ஆற்றியுள்ளார்.

இதன் போது, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிபர், எதிர்வரும் வருடம் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் 2024ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.