தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

குறித்த முதியவரை பொலிஸார், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இன்று(வியாழக்கிழமை) காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகிலுள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

வரிசையில் காத்திருந்த முதியவரே இவ்வாறு மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.