பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 25ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, ​​மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் கற்றல் முறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும், கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.