இரட்டைக் குடியுரிமை - 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இரட்டைக்குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள் தற்போதைய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சட்டமூலம் நிறைவேறினால் அந்த பத்து அரசியல்வாதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகிறது.

இதன் காரணமாக 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ள இரட்டை குடியுரிமை தடை என்ற ஏற்பாட்டை நீக்கிக் கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.