மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து : ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கைது

 

கொழும்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (28) வெள்ளவத்தை மரைன் டிரைவ் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த வெள்ளவத்தை காவல்துறையினர் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை மா அதிபரின் வாகனம் மற்றொரு காருடன் மோதி பின்னர் சுற்றுலாப் பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 மேலும் விபத்து நிகழ்ந்த போது முன்னாள் காவல்துறை மா அதிபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிஷ்டவசமாக இந்த விபத்தின் காரணமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.