இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த  விபரங்களை   மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளது. 

மேலும்,  ஜனவரி மாதம் முதல் ஜூன்  மாதம் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,822.6 மில்லியன் டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.