அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்!

அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.நாளைய தினம் (புதன்கிழமை) பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளமை காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வழமையான பெற்றோல் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.