மூன்று நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த விடயம் குறித்து இன்று  ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்று டீசல் சரக்கு கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதோடு அடுத்த 2 வாரங்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவிருக்கும் நிலையில், போதுமான எரிபொருள் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.எனவே 1,190 எரிபொருள் நிலையங்களில் விநியோகம் முடியும் வரை அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது சேமிப்பதற்காக எரிபொருளை நிரப்பவோ வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.